மேலை கங்கர்கள் - Western Gangas
மேலை கங்கர்கள் கோலார், தலைக்காடு போன்ற பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்கள். இவர்களை பற்றிய ஒரு சிறு ஆராய்ச்சி கட்டுரையே இது.
மேலை கங்கர்களின் ஒரு கிளையினர் தமிழகத்தில் சிற்றரசர்களாக ஆட்சி செய்துள்ளனர் என்பது ஒரு கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
Epigraphia Indica Vol - 7, page 192,193
இந்த கல்வெட்டு பல்லவ மன்னன் விஜயகம்பணனின் காலத்து கல்வெட்டாகும். இதில் பிருத்துவி கங்கர் ஒருவரை பற்றி குறிப்பிடுகிறது. அவரை ''காங்கேய வம்சம்'' என்றும் "அவரின் முன்னோர் என்று மாதவா அவர்களையும் அரிவர்மன்(corrupt form) என்பவரையும் குறிப்பிடுகிறது"
மாதவா என்பவரின் மெய்க்கீர்த்தியாக ''he who renowned as the splitter of even a stone pillar'' என்பதை குறிப்பிடுகிறது, இந்த மெய்க்கீர்த்தியானது மேலை கங்க மன்னர்களின் முன்னோடியான கொங்கேணி வர்மன் அவர்களின் மெய்க்கீர்த்தி ஆகும்.
கொங்கேணி வர்மனின் வழியினன் மாதவா என்கிற மன்னன் ஆகும், எனவே தன் முன்னோடியான கொங்கேணி வர்மனின் மெய்க்கீர்த்தியை மாதவா பயன்படுத்தி இருக்கிறார். அரிவர்மன் என்கிற மேலை கங்க மன்னர் மாதவா அவர்களின் வழியினர் ஆகும். இதை கீழே கொடிவழியாக கொடுத்துள்ளேன் அதனை காணலாம் -
இதன் மூலம் பிருத்துவி கங்கர் என்று தமிழகத்தில் அறியப்பட்டவர் மேலை கங்கர்களே என்பது திண்ணம். பங்களநாட்டு கங்கரைகர்களும் தங்களை "பிருத்துவி கங்கர்கள்" என்றே அழைத்துக்கொண்டனர், இது மேலை கங்கரான இரண்டாம் பிரித்விபதியின் வழியினர் என்பதை குறித்து கொள்ளவே என்பது தெரியவருகிறது
இதை பற்றி "Ramana's arunachala, ocean of grace devine" நூலிலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களை "பல்குன்றக்கொட்டத்து பங்களநாட்டுக் கூத்தாடுத்தேவன் பிரதிவிகங்கன் வன்னிய மாதேவன் அழகியசோழனேன்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே மேலை கங்க வம்சத்தவர்களான பங்களநாட்டு கங்கர்கள் வன்னியர் குலத்தவர்கள் என்பது மிகவும் தெளிவாகும்.
Comments
Post a Comment