Posts

Showing posts from February, 2023

வன்னியர்களான இருக்குவேளிர்கள்

Image
சங்க இலக்கியமான புறநானூறு 201, மிக தெளிவாகவே வேளிர் யார் என்பதை குறிப்பிட்டு விடுகிறது, அதாவது "வடபால் தவமுனி" என்று "திருமூலர் திருமந்திரத்தில்" அறியப்பட்ட அகத்தியரின் யாகத்தில் உதித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று வேளிர்களின் பிறப்பை பற்றி நன்கறிந்திருந்த புலவர் பெருமான் கபிலர் குறிப்படுகிறார்  "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!" இத்தகைய அகத்தியரின் யாகத்தில் பிறந்தவர்கள் வன்னியர்கள் என்பதை 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேலை சாளுக்கியரின் சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடுகிறது, பன்னாட்டார்கள்(பள்ளி நாட்டார்) சம்பு முனி மஹா வேள்வியில் தோன்றியவர் என்று மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது  எனவே பள்ளி நாட்டார் என்பதும் வன்னியர் என்பதும் ஒன்றே என்பதும் சம்பு முனிவர் என்பவரும் அகத்திய முனிவர் என்பவரும் ஒரே நபர் என்பதும் விளங்கும், மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாபி வென்ற பல்லவர் செப்பேடு மிக தெளிவாக "வாதாபி என்ற அரக்கனை அழித...

பிச்சாவரம் சோழகோன், சோழ வம்சமா?

Image
பிச்சாவரம் சோழர்களுக்கு "சோழகோன்" என்று ஆவணங்களில் வருவதால் அதை பிடித்து கொண்டு, தொங்கி கொண்டு அவர்கள் சோழர் இல்லை என்பவர்களுக்கு இந்த இலக்கிய பாடல் ஒரு பதில் "விட்டலராயச் சோழன் மீதுரைத்த அரியசந்த மாலைக்குப் பச்சைமணிக் கங்கணம் பாலித்திடும் கை" பிச்சாவரம் சோழ அரசர் விட்டலராய சோழனை மிக தெளிவாக சோழன் என்றே இலக்கியத்தில் குறிப்பிட்டு உள்ளனர் விட்டலராய சோழன் தான் பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலை கட்டியவர், இவரை பற்றி வன்னிய அரசர்/பாளையக்காரர் பற்றி குறிப்பிடும் "திருக்கைவளம்" நூலில் குறிப்பிட்டுள்ளது  எனவே இந்த "சோழகோன்" சோழர் இல்லை என்ற கதையெல்லாம் வேண்டாம்.

வன்னியர் குறித்து இராஜாஜி & கல்கி

Image
SSR அவர்களின் உழைப்பாளர் கட்சி பற்றி கல்கி அவர்கள் சொல்லும் போது "வன்னியர்கள் பழமையான பல்லவர் குலத்தில் வந்தவர்கள் என்கிறார்" மேலும் கல்கி அவர்களின் 1952 கால இதழில் வன்னியர் யார் தலைப்பில், ராஜாஜி கடலூர் வந்த போது வன்னியர் காங்கிரஸ் விட்டு விலகுவதை எண்ணி வருந்தி பேசியதை பதிவு செய்துள்ளதோடு வன்னியர் குலத்தவர் பல்லவர் மற்றும் சோழ சாம்ராஜ்யத்தின் படைவீரர்களாக, தளபதிகளாக, சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.