கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???

யது குல சத்ரியரான கிருஷ்ணர் உண்மையில் மேய்ப்பர் ஜாதியான கொல்லா ஜாதியை சேர்ந்தவரா என்பதை சான்றோடு பார்ப்போம் சீவகசிந்தாமணி 482ஆம் பாடல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது - "குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி நலநுகர்ந்தா னன்றே நறுந்தார் முருக னிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை யிலவலர்வா யின்னமிர்த மெய்தினா னன்றே" இதன் சுருக்கமான விளக்கம் சீவகனிடம் தன் மகளை மணந்துகொள்ளுமாறு நந்தக்கோன் கேட்டுள்ளார், குலத்தை பார்க்காதே முருகன் குறவர் குல பெண் வள்ளியை மணந்தார், ஸ்ரீகிருஷ்ணர் அரசர் குலத்தவர் ஆனால் மேய்ப்பர் குல பெண் நப்பின்னை கலப்பு மணம் செய்தார் என்பதாகும் (சீவகன் அரசகுலத்தவன் ஆனால் வணிக குலத்தினரால் வளர்க்கப்பெற்றவன்) எனவே கிருஷ்ணர் நப்பின்னை என்னும் ஆயர் குல பெண்ணை மனந்ததை கலப்பு மணமாக நந்தக்கோன் குறிப்பிடுவதை சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. எனவே கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவர் இல்லை என்பது மிக தெளிவாக விளங்குகிறது.