Posts

Showing posts from January, 2023

மறமாணிக்கம் என்றால் மறவர் சாதியா?

Image
மறவர்கள் வரலாற்றில் மண்ணள்ளி போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம் வரலாற்றை நுண்ணி ஆராய்வது நம் அனைவரின் கடமையாகும் மறவர் சமூகத்தினர் மறமாணிக்கம் என்பது தங்கள் சாதியை குறிப்பது என குறிப்பிட்டு பல blogகளை உருவாக்கியுள்ளனர், மறமாணிக்கம் என்று இணையத்தில் தட்டினாலே பலவற்றை பார்க்கலாம் உண்மையில் மறவர் என்பது வீரரை குறிக்கும் பொது சொல்லே என்று நாம் பல முறை இதற்கு முன்பே பதிவு செய்துள்ளோம், இதற்கு மறமாணிக்கம் என்பதும் விதி விலக்கல்ல  புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் - IPS 455ஆவது கல்வெட்டு "எங்களூர் இடைக்குடி மக்களில் கேரளன் சொறனுக்கு எங்கள் ஊர் பேர் மறமாணிக்ககொனேன்று பேர் குடுத்து" என்ற வாக்கியம் வருகிறது அதாவது ஊர் மக்கள் சேர்ந்து இடையர் இனத்தை சேர்ந்த கேரளன் சோரன் என்பவருக்கு மறமாணிக்கம் என்ற பெயரினை வழங்கியுள்ளனர் மேலும் சுந்தர பாண்டியரின் திருமயம் கல்வெட்டு ஒன்று IPS 490யில் உள்ளது அது மறமாணிக்கபட்டன் என்று ஒருவரை குறிக்கிறது "பட்டர்" என்றால் பிராமணரை குறிப்பதாகும் இதனால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும், மறமாணிக்கம் என்ற பெயரானது வீரத்தை குறித்த காரண பெயரே அன்றி சாதியை குறிப...

இராமநாதபுரம் சேதுபதிகள் வேளாளர்களா?

Image
இராமநாதபுரம் சேதுபதிகள் வேட்டுவ மறவர் குலத்தில் தோன்றியவர் என்றே நினைத்திருந்தேன் "Studies in Indian Epigraphy" எனும் நூலை சில காலம் முன் படிக்க நேர்ந்தது, அதில் மறவர் சேதுபதியை சூத்திரர் என்றும் வேளாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தனர், அதற்கு reference ஆக பணவிடு தூது எனும் நூலை குறிப்பிட்டு இருந்தனர் இதை எதோ footnote என்று அப்போது கடந்து சென்று விட்டேன், ஏன் என்றால் மறவர் எப்படி வேளாளர் ஆக முடியும் என்ற அசட்டு ஆய்வு ஆனால் இன்று எதேச்சையாக ஒரு நூல் கண்களில் பட்டது, அதனை ஆய்வு செய்யும் போது ஒரு மாபெரும் அதிர்ச்சி!!! முத்து விஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவியாயர் அவர்களால் 1700களின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட பணவிடு தூது எனும் இலக்கிய நூல் தான் இந்த அதிர்ச்சியை எனக்கு தந்தது இந்த நூலில் பாட்டுடைய தலைவனான முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களை மெழியான் என்கிறார் புலவர் - "விண்ணுக்கு ளோங்கு நெடு மெழியான்"(274) நீதி தவறாமல் செங்கோல் செலுத்திய சேதுபதியை மிக தெளிவாக "வேளாளர்" என்று குறிப்பிடுகிறார் - "பொய்யைத் துரத்திப் புவியில்செங் கோல்செலுத்த மெய்யைத் தலைநிறுத்...

திருமங்கை ஆழ்வார் கள்ளர் சாதி அல்ல

Image
பெருமாளுக்கு தொண்டு புரிந்த ஆழ்வார்கள் 12 பேர், இவர்களில் ஒருவர் தான் திருமங்கை ஆழ்வார் மிகவும் புகழ்பெற்ற நம் திருமங்கை ஆழ்வார் அவர்கள் பல்லவர் மீதெல்லாம் பாடல் பாடியுள்ளார் என்பது வரலாறு, அத்தகைய திருமங்கை ஆழ்வாரின் சாதி என்ன என்பதை அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர் அதிலும் பெரும்பாலான அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குடியை சேர்ந்தவர் என்கிறார்கள் இது மிகவும் பொருத்தமற்றது, அபத்தமானது என்பது நமக்கு சான்றுகளின் வாயிலாக தெரியவருகிறது 1728ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கள்ளர் குல தொண்டைமான் கல்வெட்டு அவர் தன்னை திருமங்கை ஆழ்வாரின் வழி வந்தவர் என்று குறித்து கொள்கிறார், இது "பிற்கால புகழுரை" என்று புலவர் ராசு கருதுகிறார், இவரின் இந்த கருத்து மிகவும் சரியானதாகும் பிற்காலத்தில் உயர்வு நீட்சிக்காக புதுக்கோட்டை தொண்டைமான்கள் அவ்வாறு புனைந்து கொண்டனர் என்பதே சரியாகும் இந்த கல்வெட்டை வைத்து தான் பல அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குலத்தவர் என்று எண்ணி கொண்டு கருத்தை தெரிவித்துள்ளனர் போல கள்ள குல தொண்டைமான் மட்டுமின்றி, மறவர் குல ஊத்துமலை ஜமீன்தார் அவர்...

சூரிய குலத்து வேந்தர்

Image
தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடியை முனைவர் திரு. சிவராமலிங்கம் சார் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டில் புத்தகமாக பதிப்பித்தார்கள். இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூல், திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" நூலின் வழி நூல் என்று கூறுகிறது :- "திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுபது விருத்தந் தானே" இந்த "வன்னியர் சிலை எழுபது" ஓலைச்சுவடி நூலில் இடம்பெறும் பாடல் - 59 வன்னியர்களை "சூரிய குலத்து வேந்தர்" என்று கூறுகிறது :- "காரிய மாக வென்று கனலினி லுதித்த பேர்கள் ஆரிய மைரர் தேவன் அருள்முனி குலீசன் மாயோன் வாருதி யிலங்கை மூதூர் மன்னனை யழிக்க மிக்க சூரிய குலத்து வேந்தர் தோன்றுகைச் சிலைய தன்றோ"

திண்புயச் சத்திரியோர்கள்

Image
தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருக்கும் "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலானது, சோழர் கால பெரும் புலவரான திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" என்ற நூலின் வழி நூலகும் இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலின் காலம் கி.பி. 16 - 17 ஆம் நூற்றாண்டு என்று கருதமுடிகிறது. இந்த நூலில் இடம்பெறும் பாடல் - 14 வன்னியர்களை "தோள் வலிமையுடைய சத்திரியர்கள்" என்று கூறுகிறது :- "குலங்களில் மிகுத்த வேந்தர் கோமள முகத்தி னோர்கள் சினங்களில் மிகுத்து வாழும் திண்புயச் சத்திரியோர்கள்" படைப்பு கடவுளான பிரம்மாவின் தோள்பட்டையில் இருந்து க்ஷத்திரியர்கள் தோன்றினர் என்பதால் "தோள் வலிமையுடைய க்ஷத்திரியர்கள்" (திண்புயச் சத்திரியோர்கள்) என்று இந்த வன்னியர் சிலை எழுபது பாடல் கூறுகிறது என்பதாகும்.