திண்புயச் சத்திரியோர்கள்
தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருக்கும் "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலானது, சோழர் கால பெரும் புலவரான திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" என்ற நூலின் வழி நூலகும்
இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலின் காலம் கி.பி. 16 - 17 ஆம் நூற்றாண்டு என்று கருதமுடிகிறது. இந்த நூலில் இடம்பெறும் பாடல் - 14 வன்னியர்களை "தோள் வலிமையுடைய சத்திரியர்கள்" என்று கூறுகிறது :-
"குலங்களில் மிகுத்த வேந்தர் கோமள முகத்தி னோர்கள் சினங்களில் மிகுத்து வாழும் திண்புயச் சத்திரியோர்கள்"
படைப்பு கடவுளான பிரம்மாவின் தோள்பட்டையில் இருந்து க்ஷத்திரியர்கள் தோன்றினர் என்பதால் "தோள் வலிமையுடைய க்ஷத்திரியர்கள்" (திண்புயச் சத்திரியோர்கள்) என்று இந்த வன்னியர் சிலை எழுபது பாடல் கூறுகிறது என்பதாகும்.
Comments
Post a Comment