விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணம் அறிந்த யக்ஞ நாராயண தீக்ஷிதர் குமாரன் ராஜநாராயண ஐயர் அவர்கள் கம்பள மன்னன் அவையில் எங்களின் வன்னிய புராணத்தை கி.பி. 1633 இல் கூறினார். இது பற்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நெய்வேலி செப்பேடு கூறுகிறது. வன்னிய புராணத்தின் சாராம்சம் என்னவென்றால், சம்புமாமுனிவர் சிவபெருமானிடம் பெற்ற செங்கேணி மலர் ஆகுதியை வைத்து, திருபாற்கடலில் பள்ளி கொள்ளும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வன்னிய குமாரனாய் அவதரிக்கவேண்டும் என்று தியானம் செய்து அதை ஓமகுண்டத்தில் போட கரிய நிறத்துடன் வன்னிய குமாரன் தோன்றினான் என்பதாகும். நெடுமுடியண்ணல் (என்கிற) ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வேந்தர் வேளிர்களின் தொடக்கம் என்று தெரியவருகிறது. தரணி வராகன் என்று வேளிர் அரசர் குறிப்பிடப்பட்டனர். அதாவது, உலகத்தை அரசாட்சி செய்யும் பன்றி வடிவான அரசன் என்று குறிப்பிடப்பட்டனர்.