Posts

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

Image
வன்னிய புராணம் அறிந்த யக்ஞ நாராயண தீக்ஷிதர் குமாரன் ராஜநாராயண ஐயர் அவர்கள் கம்பள மன்னன் அவையில் எங்களின் வன்னிய புராணத்தை கி.பி. 1633 இல் கூறினார். இது பற்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நெய்வேலி செப்பேடு கூறுகிறது. வன்னிய புராணத்தின் சாராம்சம் என்னவென்றால், சம்புமாமுனிவர் சிவபெருமானிடம் பெற்ற செங்கேணி மலர் ஆகுதியை வைத்து, திருபாற்கடலில் பள்ளி கொள்ளும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வன்னிய குமாரனாய் அவதரிக்கவேண்டும் என்று தியானம் செய்து அதை ஓமகுண்டத்தில் போட கரிய நிறத்துடன் வன்னிய குமாரன் தோன்றினான் என்பதாகும். நெடுமுடியண்ணல் (என்கிற) ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வேந்தர் வேளிர்களின் தொடக்கம் என்று தெரியவருகிறது. தரணி வராகன் என்று வேளிர் அரசர் குறிப்பிடப்பட்டனர். அதாவது, உலகத்தை அரசாட்சி செய்யும் பன்றி வடிவான அரசன் என்று குறிப்பிடப்பட்டனர்.

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???

Image
  யது குல சத்ரியரான கிருஷ்ணர் உண்மையில் மேய்ப்பர் ஜாதியான கொல்லா ஜாதியை சேர்ந்தவரா என்பதை சான்றோடு பார்ப்போம் சீவகசிந்தாமணி 482ஆம் பாடல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது - "குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி நலநுகர்ந்தா னன்றே நறுந்தார் முருக னிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை யிலவலர்வா யின்னமிர்த மெய்தினா னன்றே" இதன் சுருக்கமான விளக்கம் சீவகனிடம் தன் மகளை மணந்துகொள்ளுமாறு நந்தக்கோன் கேட்டுள்ளார், குலத்தை பார்க்காதே முருகன் குறவர் குல பெண் வள்ளியை மணந்தார், ஸ்ரீகிருஷ்ணர் அரசர் குலத்தவர் ஆனால் மேய்ப்பர் குல பெண் நப்பின்னை கலப்பு மணம் செய்தார் என்பதாகும் (சீவகன் அரசகுலத்தவன் ஆனால் வணிக குலத்தினரால் வளர்க்கப்பெற்றவன்) எனவே கிருஷ்ணர் நப்பின்னை என்னும் ஆயர் குல பெண்ணை மனந்ததை கலப்பு மணமாக நந்தக்கோன் குறிப்பிடுவதை சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. எனவே கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவர் இல்லை என்பது மிக தெளிவாக விளங்குகிறது.

விளந்தை வாண்டையார்

Image
  கி.பி 1791ஆம் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது - "வன்னியர் சிங்ககொடி தலைவரான முத்துவிசையரெங்கப்ப காலாக்க தொழர் னாளில் பந்து செனமான விளந்தை காத்த பெருமா வாண்டாயர் குமாரன் பெரியசாமி வாண்டயன் ராமசாமி வாண்டாயன்" அதாவது உடையார் பாளையம் வன்னிய அரசர் "முத்து விசைய ரெங்கப்ப காலாட்கள் தோழ உடையார்" சிங்க கொடி கொண்டிருந்ததையும் அவர்களின் உறவினரான விளந்தை பாளையக்காரர் "காத்த பெருமாள் வாண்டையார்" அவரின் மகன்கள் "பெரியசாமி வாண்டையார், ராமசாமி வாண்டையார்" ஆகியோர் விளந்தை சிவன் கோயில் கட்டியதை குறிப்பிடுகிறது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1700களிலே வன்னியர் என்றே உடையார் பாளையம் அரசரும், விளந்தை பாளையக்காரர் வாண்டையாரும் குறிக்க பெறுகின்றனர், வன்னியர்னா 1900ல வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்று உருட்டுறவன் உங்களுக்கு யாராவது தெரிந்தால் அவனுக்கு பதிவை share செய்து கேள்வி கேளுங்க.  முதல் படம் - உடையார் பாளையம் பாளையக்காரர் இரண்டாவது படம் - விளந்தை வாண்டையார் சிற்பம்.

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

Image
  சுந்தர பாண்டியன் அவையில் வீர பிள்ளை அவர்களால் பாண்டியன் அவையில் இயற்றப்பட்ட வன்னியர் புராணத்தில் கம்பர் எழுதிய "சிலை எழுபது" பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது "சம்புவின்மகத்துதித்த தாட்டிகவன்னியரன்று அம்புவிதனினிறைந்தே யரசுசெய்வலிமைகண்டே #கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை யின்பமாய்நவின்ற கீர்த்தியாவரேயுணரகிற்பார்" அதாவது முன்பு கம்பன் வன்னியர் புராணத்தை சுருக்கமாக கூறினாராம், இது சிலை எழுபதையே குறிப்பிடுவதாகும் கம்பர் காலம் 12நூற்றாண்டின் முற்பகுதி, சுந்தர பாண்டியன் 13ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.

நரலோகவீர காலிங்கராயர்

Image
பெரும்பான்மையானோர் மூவேந்தர் மற்றும் பல்லவர் வெற்றி வரலாற்றை தெரிந்துகொள்ள காட்டும் ஆர்வத்தை அந்த வேந்தர்களின் வெற்றிக்கு பாலமாக இருந்த படை தலைவர்கள், குறு நில வேந்தர்கள், வீரர்கள் ஆகியோரின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை அரும்பக்கிழான் - நரலோகவீரன் - அருளாகரன் - காலிங்கராயன் - மணவிற் கூத்தன் - தொண்டையர்க்கோன் என பல்வேறு பெயர்களை கொண்டவர் "நரலோகவீர பேரரையர்" இந்த நரலோகவீரன் பற்றி நாம் முதன் முதலில் அறிவது குலோத்துங்க சோழர் காலத்தில் தான். கலிங்க போரின் பின்பே இவரின் பேராற்றல் எத்தகையது என்று தெரிய உதவுகிறது "வேங்கையினும் கூடார் விழிஞத்தும், கொல்லத்தும் கொங்கத்தும் ஒடா இரட்டத்தும், நாடாதடியெடுத்த வெவ்வே றரசிரிய வீரக்கொடியெடுத்த காலிங்கர் கோனும்" வேங்கி என்கிற கீழை சாளுக்கியர் தலைநகரையும், ஒட்டம் என்கிற ஒரிசாவையும், இராஷ்ட்ரகூடரின் அரியாசனமான மராட்டியத்தையும் என வடுகர்களின் தீய கனவாய் தோன்றி அவர்கள் அனைவரையும் அழித்து சோழ வேந்தனுக்கு கீழ் பணிய செய்த மாவீரர் என்கிறது விக்ரமசோழனுலா இத்தகைய வீரத்தாலும் தலைமை பண்பாலும் சோழ ராஜ்யத்தின் மிக முக்கிய அமைச்சராகவ...

வன்னியர்களான இருக்குவேளிர்கள்

Image
சங்க இலக்கியமான புறநானூறு 201, மிக தெளிவாகவே வேளிர் யார் என்பதை குறிப்பிட்டு விடுகிறது, அதாவது "வடபால் தவமுனி" என்று "திருமூலர் திருமந்திரத்தில்" அறியப்பட்ட அகத்தியரின் யாகத்தில் உதித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று வேளிர்களின் பிறப்பை பற்றி நன்கறிந்திருந்த புலவர் பெருமான் கபிலர் குறிப்படுகிறார்  "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!" இத்தகைய அகத்தியரின் யாகத்தில் பிறந்தவர்கள் வன்னியர்கள் என்பதை 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேலை சாளுக்கியரின் சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடுகிறது, பன்னாட்டார்கள்(பள்ளி நாட்டார்) சம்பு முனி மஹா வேள்வியில் தோன்றியவர் என்று மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது  எனவே பள்ளி நாட்டார் என்பதும் வன்னியர் என்பதும் ஒன்றே என்பதும் சம்பு முனிவர் என்பவரும் அகத்திய முனிவர் என்பவரும் ஒரே நபர் என்பதும் விளங்கும், மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாபி வென்ற பல்லவர் செப்பேடு மிக தெளிவாக "வாதாபி என்ற அரக்கனை அழித...

பிச்சாவரம் சோழகோன், சோழ வம்சமா?

Image
பிச்சாவரம் சோழர்களுக்கு "சோழகோன்" என்று ஆவணங்களில் வருவதால் அதை பிடித்து கொண்டு, தொங்கி கொண்டு அவர்கள் சோழர் இல்லை என்பவர்களுக்கு இந்த இலக்கிய பாடல் ஒரு பதில் "விட்டலராயச் சோழன் மீதுரைத்த அரியசந்த மாலைக்குப் பச்சைமணிக் கங்கணம் பாலித்திடும் கை" பிச்சாவரம் சோழ அரசர் விட்டலராய சோழனை மிக தெளிவாக சோழன் என்றே இலக்கியத்தில் குறிப்பிட்டு உள்ளனர் விட்டலராய சோழன் தான் பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலை கட்டியவர், இவரை பற்றி வன்னிய அரசர்/பாளையக்காரர் பற்றி குறிப்பிடும் "திருக்கைவளம்" நூலில் குறிப்பிட்டுள்ளது  எனவே இந்த "சோழகோன்" சோழர் இல்லை என்ற கதையெல்லாம் வேண்டாம்.