மலையமான்களான மும்மலராயர்கள்

மலையமான் வம்சத்தை சேர்ந்த ஒருவரை பள்ளி குலத்தவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது "குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனான பள்ளிக்கட்டு மும்மலராயன்" (A.R.E No.81 of 1900) மலையன்/மலையமான்/மலையகுலராயன் என்பதெல்லாம் மலையமான் அரச குலத்தை குறிக்கும் சொற்கள் அப்படி இருக்கும் போது இந்த "மும்மலராயன்/மும்மலையன்" என்பது எதனை குறிக்கும் என்று பல நாள் சந்தேகத்தை நண்பர் ஒருவர் தீர்த்து வைத்தார் சங்க கால மலையமான் காசுகள் பலவற்றில் முன்புறம் மலையமான்களின் இலச்சினையான குதிரையும், பின்புறம் மூன்று மலைகளும் அதற்கு கீழ் பெண்ணை ஆறு ஓடுவது போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மலை என்பது இதை தான் குறிக்கும் போல என்பதை அறிந்து கொண்டேன், இந்த மும்மலராயர்கள் என்போர் சங்க கால மலையமான் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பது விளங்கியது.