Posts

Showing posts from December, 2022

சிங்கவரம் - 1755ஆம் ஆண்டு வன்னியர் குலம் கல்வெட்டு

Image
  செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் சுவாமிக்கு கருங்கல் மண்டபம் கட்டி புண்ணியம் தேடிய பழங்கால மன்னரின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ஊராட்சி சாவடிப் பகுதியில் பழைமையான கருங்கல் மண்டபம் உள்ளது. கி.பி. 1755-இல் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டு ஓவியங்கள் இருந்து அழிந்துள்ளன. மேலும், மண்டபத்தின் சிறப்பு குறித்து இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டைக் கண்டறிந்த கல்வெட்டு ஆய்வாளரும், விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியருமான த.ரமேஷ், அந்தப் பகுதி தொல்லியல் ஆர்வலர் பொறியாளர் மணி ஆகியோர் கூறியதாவது: சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மண்டபத்தின் கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில், இன்றளவும் தை அமாவாசையில் சிங்கவரம் சுவாமி ரங்கநாதர் வருகை தருவதாக நம்பிக்கை வைத்து, கோயில் உற்சவரைக் கொண்டுவந்து விழா நடத்தி அன்னதானம் செய்கின்றனர். மண்டபத்தின் எதிரே பாறையின் இடையில் நீர் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சரிவான பகுதியில் தடுப்புச் சுவரை கட்டமைத்து தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளனர். அண்மையில் ஆ...

யாதவர் அனைவரும் மேய்ப்பவர் குலத்தவரா? - 2

Image
  மத்துவாச்சாரியரின் மகாபாரத தாத்பரிய நிர்ணயம் பின்வருமாறு கூறுகிறது  tat tvaM bhavasva aashu cha devakI sutaH tathaiva yo droNa nAmA vasuH saH | sva bhAryayA dharayA tvat pitR^itvaM prAptuM tapaH tepa udAra mAnasaH || 11 .220|| tasmai varaH sa mayA sannisR^ishhTaH sa chA.asa nanda aakhya uta asya bhAryA | namnA yashodA sa cha shUra tAta sutasya vaishyA prabhavo atha gopaH || 11 .221|| “So, you take birth as the son of devaki. In the same way, a vasu-god named droNa undertook ascesis along with his wife named dhara, only to get you as his son, and I granted it... that droNa named vasu-god took birth as nanda, and his wife dhara took birth as yashoda... because that nanda took birth from his father shuura through a vaishya lady, nanda became a cowherd... [11-220, 221] மொழிப்பெயர்ப்பு:- (பிரம்மன் விட்ணுவிடம் பேசுவது போன்ற சூத்திரம்....) நீ தேவகியின் மகனாக பிறந்தாய். அதே போல் அட்ட வசுக்களின் ஒருவ னான துரோணனும் அவன் மனைவி தாராவும் உன்னை மகனாக பெறுவதற்காகவே துரோணனை நந்தகோபனாகவு...

யாதவர் அனைவரும் மேய்ப்பர் குலத்தவரா? - 1

Image
  யயாதிக்கு பிறகு யதுவும் அவர் வழித்தோன்றல்களும் என்ன ஆயினர்? யயாதி என்னும் சந்திர குல மன்னனின் சாபத்தால் யதுவும் அவர் வழித்தோன்றல்களும் நிரைமேய்க்கும் தொழில் மேற்கொண்டதாகவும் அந்த யாதவரே இன்றைய ஆயர் என்றும் கூறப்படுகிறது.இது உண்மையா என்று ஆராய்வோம்.. 1)ஆனால் பாகவத புராணம் மிகத் தெளிவாக சொல்வது யாதெனில் யதுவுக்கு யயாதியின் அரசின் தென் பகுதி கொடுக்கப்பட்டதாக! --------  (ŚB 9.19.22) दिशि दक्षिणपूर्वस्यां द्रुह्युं दक्षिणतो यदुम् । प्रतीच्यां तुर्वसुं चक्र उदीच्यामनुमीश्वरम् ॥ २२ ॥ diśi dakṣiṇa-pūrvasyāṁ druhyuṁ dakṣiṇato yadum pratīcyāṁ turvasuṁ cakra udīcyām anum īśvaram Synonyms:- diśi — in the direction; dakṣiṇa-pūrvasyām — southeast; druhyum — his son named Druhyu; dakṣiṇataḥ — in the southern side of the world; yadum — Yadu; pratīcyām — in the western side of the world; turvasum — his son known as Turvasu; cakre — he made; udīcyām — in the northern side of the world; anum — his son named Anu; īśvaram — the King. Translation:- King Yayāti gave the southeast to his son Druhy...

வேளாளர் வேளிரா?

Image
  வேளாளர் வேளிரா?:- தொல்காப்பிய பொருளதிகார அகத்திணையியல் நூற்பா 30 , "மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப"  என்பதாகும்.இந்நூற்பாவிற்கு நச்சினார்க்கினியார் உரையில் நடைப்பெற்ற இடைச்செருகலே கடந்த நூற்றாண்டில் பல அறிஞர்களை வேளிர் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டது.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.அஃதாவது," Oil and truth always come to the surface"என்பதாகும்.இதன் பொருள் எண்ணெய் எவ்வாறு நீரின் மேற்பரப்பிற்கு வந்து விடுகிறதோ அதே போல் உண்மையும் யார் தடுத்தாலும் மேற்பரப்பிற்கு வந்து விடும் என்தாகும். இனி,நச்சினார்க்கினியார் உரையில் ஏற்பட்ட இடைச்செருகலை நுணுகி ஆராய்ந்துக் கண்டறிவோம். நூற்பா 30 ற்கு உரிய நச்சி உரையை ஐந்து பகுதியாய் பிரித்து ஆராய்வோம். முதல் பகுதி :" இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமோர் பிரிவு விகற்பங் கூறுகின்றது." இது நூற்பாவின் நோக்கத்தை விளக்குவாதாகும்.வேளாளருக்குரிய ஒருவகை பிரிவை விளக்குவதே இந்நூற்பாவின் நோக்கமாகும். இரண்டாம் பகுதி:- "மன்னர் பாங்கின்- அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல்  காரணமாக; பின்னோர் ஆகுப  -  பின்னோரெனப்பட்ட  ...

வேளிர் வரலாற்றில் வரும் வடபால் முனிவர் யார்?

Image
  திருமூலர் திருமந்திரத்தில் வரும் வடபால் தவமுனி என்பது அகத்தியரை தான் குறிக்கும் என்று உரைக்காரர் பொருள் எழுதி உள்ளார் "சிவாக்கினியை இதயகமலத்தில் தோற்று விக்கின்ற வடதிசை தவமுனிவரும் வைகையறைப் போதிலேயே அக்கினி காரியம் செய்யும் முனிவரும் ஆகிய அகத்தியர்"  என்று மிக தெளிவாக வடபால் தவமுனி என்பது அகத்தியரே என்று ஆசிரியர் உரை எழுதியுள்ளார் புறநானூறு 201ஆம் பாடலில் குறிப்பிடப்படும் வடபால் முனிவர் என்பது அகத்தியர் என்பது புலப்படுகிறது, அகத்தியரும் சம்பு முனிவரும் ஒருவரே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளது அதனை பிறகு ஒரு பதிவில் பார்ப்போம் வேளிர் வரலாறு என்பது வன்னியர்களின் வரலாறு என்பது மெய்யாகும். 

வடபால் முனிவர் யார்?

Image
வடபால் முனி யார் என்பது பல நாள் சர்ச்சை, அதற்கு முடிவு கிடைத்துள்ளது!!! திருமூலர் திருமந்திரம் ஒரு பாடல் உள்ளது - "அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே" இதில் "அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி" இந்த வரிக்கான பொருள் மட்டும் காண்போம் அதாவது வேள்வி வளர்க்கிற அகத்தியர், கயிலாத்தில் இருக்கும் சிவபெருமானோடு சேர்ந்து வேள்வியை வளர்க்கிறார் என்பது இதன் பொருள் இதில் பாலவன் என்பது சிவனை குறிக்கும் - பாலினி பாலவன் பாகம தாகுமே (திருமந்திரம்.1216) மங்கி - மயங்கி அங்கி - நெருப்பு/வேள்வி உதயம் செய் - வளர்க்கின்ற வடபால் தவமுனி - அகத்தியர் இது நாம் சொன்ன பொருள் இது தவிர உரை ஆசிரியர் இதற்கு மிக அற்புதமாக இரண்டு பொருள்களை கொடுத்துள்ளார், இரண்டையும் உற்றுநோக்கினால் அவர் வடபால் தவமுனி என்று அகத்தியரையே சொல்வது தெளிவாக விளங்கும் அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் என்பதற்கு - நாள்தொறும் மந்திரங்களை ஓதி நாடு வளம் பெற யாகம் வளர்ப்பவன் அகத்தியன் என்று உரை ஆசிரியர் பொருள் கொள்கிறார் ...

தூய சந்திர குலத்து வன்னியர்

Image
  பெரியபுராணம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது - "வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போற்" இதில் மற குல வேட்டுவர் சாதி என்று குறிக்கிறது, ரெண்டுமே ஒரே சாதியை குறிக்கும் சொற்கள் தான் அடுத்ததா "ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்" என்ற வரி வருகிறது, ஈழவர் என்பதும் சான்றார் என்பதும் ஒரே சாதியை குறிக்கும் சொற்கள் தான், அதாவது நாடார்களை குறிக்கும் சொற்கள், இது பெரியபுராணத்தில் ஏனாதிநாதரை குறித்து வருகிறது அடுத்ததா "தூயச்சந்த் வங்கிசம்சேர் வன்னியரில்" இது பணவிடு தூது நூலில் வரும் வாசகம், இதன் பொருள் சந்திர குலத்து வன்னியர் என்பதே படம் - சந்திர குலத்து சம்புவராயரின் சின்னம், சம்புவராயர் சின்னம் இருக்கும் இடத்தில் சூரியன் - சந்திரன் உள்ளது என்று சிலர் உருட்டுவார்கள், ஆனால் இந்த படத்தில் மிக தெளிவாக சந்திரன் மட்டும் தனியாக உள்ளது, இதன் காரணம் பல்லவ குல சம்புவராயர்கள் சந்திர குலம் என்பதாலே.

மனு வேந்தன் வழி தோன்றிய சோழர்கள்

Image
கி.பி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாவடுதுறை ஆதின வித்வான் திரு. சபாபதி நாவலர் ஐயா அவர்கள் "சிதம்பர சபாநாத புராணம்" இயற்றினார்கள். இப் புராணத்தில் வரும் திருநாட்டுபடலப் பாடல் ஒன்று சோழர்களை மனு வேந்தன் வழியே தோன்றியவர்கள் என்று கூறுகிறது :- "மனுவென்றுரைக்குமொரு வேந்தன் வழியே தோன்றிப் பல சோழர் முனைவென்றரசு வீற்றிருந்து முழுமாநிலமு மனுநீதி நனிநன்றோங்கச் சைவநெறி நன்கு வளர்த்து நடராசவனகன் கருணைக்கடன் மூழ்கற்கமைந்த நாடு சோணாடு"  மேலும் இப் புராணம் மனு வேந்தன் வழி தோன்றிய "சிங்க வர்மன் (என்ற) இரணிய வர்மனின்" வரலாறு பற்றி கூறுகிறது :- "அங்கவன் பெயர் சிங்க வன்மன்" "சிங்கவன்மனம் மனுவாந் தந்தை பொற்கழல் வணங்கி" "மனுவெனும் வேந்தனானோன்" "அறிவுடைச் சிங்க வன்மன்" "வெண்குட்டந் தீர்ப்பானெண்ணி விடைபெற்றுச் சிங்க வன்மன்" "இரணிய வன்மகேளிவர் பொருட்டுனக்" "கங்கைநீர் கொண்டபிடேகங்காசிஸ் சீர்த்துங்கமாதவரி" "மாமனுவினுக்காட்டுமன்னுழி" "தில்லை வாழந்தணர் செயும் வேள்வியாது"   "பதஞ்சலி யிர...

வன்னிய வரி - 2

Image
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் (கண்டராதித்தபுரம்) அருகே உள்ள ஓடுவாங்குப்பத்தில் உள்ள முதலாம் வேங்கடதேவ மகாராயர் காலத்திய (கி.பி. 1588) கல்வெட்டு ஒன்று :- "வாணாதராய முதலியார் பண்டாரத்தார் அவர்களுக்கு ஸிலாஸாநம் பண்ணி குடுத்தப்படி கண்டராதித்தபுரம் காரணம் தாங்கல் வில்லவதரையர் குப்பம் ஓடுவன் குப்பம் செல்லன் குப்பம் அமிஞ்சிலேந்தல் ஆக க்ராமம் ஆறும் ததம் பண்டாரத்தார் அவர்களுக்கு விட்ட மாஸத்துக்கும் அரசு மானியங்களுக்கும் வன்னிய வரிக்கும் வெச்ச" என்று குறிப்பிடுகிறது. வேட்டவலம் அரசர் வாணாதராய முதலியார் பண்டாரத்தார் அவர்களுக்கு கண்டரதித்தபுரம், காரணம் தாங்கல், வில்லவதரையர் குப்பம், ஓடுவன் குப்பம், செல்லன் குப்பம், அமிஞ்சியேந்தல் உள்ளிட்ட ஆறு கிராமங்கள் மாசத்திற்காக எழுதிக்கொடுக்கப்பட்டது. மேலும் வேட்டவலம் அரசர் பெரும் அரசு மானியம், வன்னிய வரி பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேற்சொன்ன விஜயநகர கால கல்வெட்டு குறிப்பிடும் "வன்னிய வரி" என்பது வன்னிய மக்கள் செலுத்தும் வரியாகும்.   "வன்னிய வரி" பற்றி விஜயநகர கால விரிஞ்சிபுரம் கல்வெட்டும் குறிப்பிடுகிறது என்பதாகும்...

பல்லவர் தோன்றல்

Image
மறை (வேதம்) மொழிந்த மரபில் தோன்றிய கருணாகர தொண்டைமான் அவர்களை சோழர் கால புலவர் பெருமான் ஜெயங்கொண்டார் அவர்கள் தான் இயற்றிய கலிங்கத்துப் பரணியில் (களம் பாடியது, அதிகாரம்-13, பாடல்கள்- 63 & 64) :- "பல்லவர் தோன்றலைப் பாடிரே" "தொண்டையர் வேந்தனைப் பாடிரே" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, "பல்லவர் குலத்தில் தோன்றியவர்" என்று கருணாகர தொண்டைமான் அவர்களை குறிப்பிட்டுள்ளார் என்பதாகும். அறம் என்ற தர்மத்தை மேற்கொண்ட அறந்தாங்கி தொண்டைமான் அரசர்கள் தங்களுடைய செப்பேடுகளில் கலிங்கம் வென்ற கருணாகர தொண்டைமான் அவர்களை "தங்களுடைய முன்னோர்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "கம்பன் தமிழுக்கு செம்பொன் அளித்தோர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர் அறந்தாங்கி தொண்டைமான் அரசர்கள். 'சிலை எழுபது' என்ற நூலினை பாடிய செந்தமிழ்க் கம்பன் அவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளித்தார் கருணாகர தொண்டைமான் என்று சிலை எழுபது பாடல்-68 கூறுகிறது. மேலும் சிலை எழுபது (பாயிரம்-2) பாடல் ஒன்றில் கவிசக்கரவர்த்தி கம்பர் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்கள் :- "செந்தமிழ்க் கம்பன் ...

சிலையெழுபது நூல் போலியானதா?

Image
கம்பர் இயற்றிய சிலையெழுபது நூலை சிலர் பொச்செரிச்சல் கொண்டு பிற்கால நூல் என்று கூறுவதுண்டு, இது மிக பெரிய பொய் என்பதை சான்றுகள் கொண்டு நிறுவுவோம் கம்பர் காலம் என்ன என்பதும் இந்த நூலின் வாயிலாக தெரியவருகிறது இந்த நூல் பல்லவ குல தோன்றலான கருணாகர தொண்டைமான் அவர்களின் சாதியான வன்னியர் சாதியின் புகழை பற்றி குறிப்பிடும் நூல் ஆகும் இந்த நூல் பற்றிய குறிப்புகள் பிற்கால வன்னியர் குல செப்பேடுகளிலும், அறந்தாங்கி தொண்டைமான்களின் செப்பேடுகளிலும் காணலாம், இதற்கு ஒரு வழி நூல் எல்லாம் கூட உண்டு கருணாகர தொண்டைமான்னின் காலம் 11-12ஆம் நூற்றாண்டு ஆகும், இவர் குலோத்துங்க சோழர் மற்றும் அவரின் மகன் விக்ரம் சோழரின் படை தலைவனாக இருந்தவன், இதனை சோழர் வரலாறு நூல்களில் இருந்து அறியலாம், மேலும் சோழர் உலா நூல்களிலும் இதனை அறியலாம் சிலையெழுபது நூலின் நம்பகத்தன்மை அதில் வரும் இரண்டு பாடல்களின் மூலம் அறியலாம், அந்த நூலில் கருணாகரனின் சமகால மன்னர்களான குலோத்துங்கன் மற்றும் விக்ரம சோழன் பற்றிய குறிப்புகள் வருவதோடு அவர்களை வன்னியர் என்றும் குறிப்பிடுகிறது - "கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் கவின்கொண் டமைந்தவென்றி...

கி.பி 1785ஆம் ஆண்டு சாதி வன்னியன் என்று குறிப்பிடும் கல்வெட்டு - Vanniya Caste

Image
கர்நாடகா மாநிலம் செரிங்கப்பட்டம் பகுதியில் உள்ள தமிழ் கல்வெட்டு. விஷ்ணு கோத்திரம், சாதி வன்னியன், தர்மராசா கோயில் பூசாரி. காலம் சாலிவாகன சகாப்தம் ௲௭௱௭ அதாவது 1785களின் கல்வெட்டு இது வன்னியன் என்பது சாதியே இல்ல பட்டம் என்றும், அது 1900களில் நாம் adopt செய்து கொண்டது என்று பொய் கூறி வருபவருக்கு இது சவுக்கடியாக அமையும்.

கிபி 1300கள் கால வன்னியர் சமூக கல்வெட்டு

Image
வன்னியர் என்பது சமூகமே இல்லை என்று உருட்டுறவங்க இந்த கல்வெட்டை எல்லாம் பார்த்தா என்ன செய்வாங்க??  கிபி.1382ஆம் ஆண்டில் திருவிழாவில் இறைவன் ஶ்ரிபாதம் தாங்கும் மரியாதை வன்னியருக்கு அளித்து, அவர்களின் கால்நடைகளுக்கு விதித்த வரியை பற்றிய கல்வெட்டு தான் இது இந்த வன்னியர் சாதி இல்லனா அப்ப என்ன? இது சாதி என்பதற்கு எல்லா சாராம்சமும் உள்ளது வன்னியர் என்பதை பட்டம் என்று கூச்ச நாச்சம் இல்லாமல் பரப்பி வருபவர்களுக்கு ஒரு மாபெரும் பதிலடி விரைவில் தயார் ஆகி வருகிறது மொத்தரையும் விரைவில் ஆவணப்படுத்தி பெருசா அடிப்போம், இப்பவே விழிச்சிக்கலனா நாளைக்கு வரலாறு நமக்கு இருக்காது நம் வரலாறை தேட வைத்தவர்கள் இவர்களே, எனக்கே இந்த மாதிரியான கல்வெட்டுகளை எல்லாம் பார்த்த பிறகு தான் வன்னியர் என்பது 100% சாதியே என்ற எண்ணம் வலு பெறுகிறது, மேலும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது.

2100 ஆண்டுகளுக்கு முன் இருந்த அக்னி குலத்தின் குறிப்பு - Satavahana

Image
நூற்றுவர் கன்னர் என்கிற சதகர்னி அரசு இன்றைய கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என பெரும் பகுதியை 2100 வருடங்கள் முன்பு ஆட்சி செய்த பேரரசு சதகர்னிகளின் தளபதிகளாக இருந்தவர்கள் தான் மேலை கங்கர், சாளுக்கியர், பல்லவர், வாணாதிராயர் என்ற கூற்று உண்டு அதற்கு சில சான்றுகளும் உண்டு இத்தகைய சதகர்னி சாதவாகன அரசர் ஒருவரின் மனைவியாக நயணிகா என்பவர் அறியப்படுகிறார், இவர் அங்கியா குலத்தை சேர்ந்தவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது - "Amgiya kulavadhanasa" "amgiya kulavadhanasa" என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது, அங்கி குலம் என்பதன் பொருள் அக்னி குலம் என்பதே எனவே 2100 ஆண்டுகள் முன்பே அக்னி குலம் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது என்பது புலப்படுகிறது, புறநானூறு 201ஆம் பாடலில் வேளிர் யாகத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடுகிறது, அதாவது அக்னி குலம் என்கிறது அதன் பிறகு அக்னி குலத்தை பற்றி குறிப்பிடும் மிக பழமையான சாசனம் இதுவே, அதுவும் கல்வெட்டு வடிவில் கிடைத்திருப்பது சிறப்பு Source - Report On The Elura Cave Temples And The Brahmanical And Jaina Caves In Western India.

வேள் குல மேலை சாளுக்கியர்

Image
 மேலை சாளுக்கியர் வன்னியரே!!! வேள் குலத்தவர் சாம்புமுனிவரின் யாகத்தில் தோன்றியவர் என்பது சங்க பாடலில் கபிலர் குறிப்பிடுவது அனைவரும் அறிந்ததே  அதே போல் பிற்கால சோழர் தங்களின் எதிரி நாட்டவரான மேலை சாளுக்கியரை மிக தெளிவாக "வேள் குல சாளுக்கியர்" என்று குறிப்பிட்டுள்ளனர், இதனால் சாளுக்கியர் வன்னியர் என்பது உறுதி ஆகிறது இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் விக்ரமங்கதேவசரிதம் எனும் நூல் பில்ஹான எனும் புலவர் இயற்றியதாகும் அதில் அவர் "உலகில் அட்டூழியங்கள் கூடியதால் அதனை முடிவுகட்ட தேவர்களின் தலைவன் இந்திரன் பிரம்மனிடம் வேண்டுகிறார், பிரம்மன் தனது பாத்திரத்தை(chuluka) உற்று நோக்குகிறார் அதிலிருந்து வீரன் ஒருவன் பிறந்து மூவலகையும் காக்கிறான், அவன் வம்சத்தில் சாளுக்கியர் உற்பத்தி ஆகினர்" மேலும் Vadnagar எனும் பகுதியில் உள்ள கல்வெட்டும் மேலை சாளுக்கியர் ஹரிதா பஞ்சசிகர் எனும் முனிவரின் பானை/பாத்திரத்தில் தோன்றியவர் என்கிறது இதே கதை தான் வன்னியர் புராணம் ஆகும், அரக்கர்களின் அட்டூழியங்களை பொருட்படுத்த முடியாமல் தேவர்கள் சிவனை வேண்ட, அவர் பிரம்மனிடம் சொல்லவும் பிரம்மன் சம்பு முடிவரை அழைத...

ஒளியர் - Tigala - Tigula

Image
சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் கரிகாலனை எதிர்த்து போரிட்டு அடக்கிய அரச மரபினரி்ல் ஒளியரும் ஒருவர் இந்த ஒளியர் என்போர் திகுளராக இருக்க வேண்டும் என்கிறார்கள்,  ஒளி - நெருப்பு/வெளிச்சம்  திகுளர் - நெருப்பு குலத்தவர் தமிழ் புலவர்கள் பிறமொழி பெயர்களை மொழி பெயர்த்து தமிழ் இலக்கியங்களில் தமிழ் மொழியில் கூறுவது புதிதல்ல சதகர்ணி என்கிற சாதவஹனா அரசரை நூற்றுவர் கண்ணர் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்  எனவே திகுளரே ஒளியராக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

வன்னிய வரி

Image
 வன்னியர் என்பது சாதி என்று நிறுவ நமக்கு ஏராளமான சான்றுகள் உள்ளது அதில் இதுவும் ஒரு சான்றாக கருதிகொள்ளுங்கள், இதுவும் ஒரு முக்கிய சான்றாகும் பாண்டியர் காலம் தொடங்கி சங்கம விஜயநகர அரசு காலம் வரை வன்னியர்கள் அரசுக்கு செலுத்தும் வரி என்று "வன்னிய வரி" என்று ஒன்று இருந்துள்ளது, சாதிகள் தங்களின் சாதியின் பெயரில் வரி செலுத்தும் முறை என்பது இருந்துள்ளது, இதற்கு மற்றொரு சான்றாக அமைவது "இடைவரி"(A.R.E 579 of 1902) ஆகும், அதாவது இடையர் குலத்தவர் செலுத்திய வரி ஆகும் இடைவரி போலவே "வன்னியவரி" என்பதை பற்றி விஜயநகர மன்னர் வீர புக்கராயர் மற்றும் ஶ்ரீ வீர பிரதாபராயர் கல்வெட்டில் வருகிறது A.R.E 25 of 1913 & A R.E 30 of 1913னில் வருகிறது, இதன் காலம் 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் ஆகும் மேலும் பராக்கிரம பாண்டியர் காலத்திலும் "வன்னியவரி" பற்றி கல்வெட்டில் வருகிறது A.R.E 33 of 1913 இம்மூன்று கல்வெட்டுகளும் வன்னியர்கள் அதிகம் வாழும் ஆடுதுறை வட்டம் பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் இருப்பதாகும்.