Posts

Showing posts from October, 2022

வன்னியர்களின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு

Image
  "வம்பணாரும் புண்டரிக மலர் மடந்தை பாலடி நாளுஞ் சம்பு மாமுனி மாபலி வந்தோர்" வன்னியன் என்னும் பெயர் அச்சாதியினர் அக்னியில் பிறந்ததால் ஏற்பட்ட பெயராகும், இதனை வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த பெயர் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு, அவர்கள் அனைவரும் இந்த சான்றுகளை காண நேரிட்டால் அவர்கள் இந்த கருத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வன்னியர்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறை வெளியிட்ட அரியலூர் மாவட்ட கல்வெட்டுகள் வாயிலாக அறிய நேரிட்டது, அதில் அவர்கள் தங்களை "சம்பு மாமுனி மாபலி வந்தோர்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் மூலம் வன்னியர்கள் அக்னியில் பிறந்த கதை என்பது சோழர் கால சாசனத்திலே இடம்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது, இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், இது அப்புராணத்தின் தொன்மம் யாது என்பதை நமக்கு நன்கு உணர்த்துகிறது "வஞ்சி கூடலுறை காஞ்சி வளவர்(சோழன்) கோமானருளினாலே தஞ்சையுள்ளுங் காப்பதற்குச் சக்கரவாளம் பெற்றுடையோர்" மேலும் பிற்கால சோழன் தஞ்சையை முத்தரையர் மன்னர்களிடம் இருந்து வென்ற அதனை கைபற்றி ஆட்சி செய்தனர், கி...

கைக்கோளர் படையில் இருந்த பள்ளிகள்

Image
  கைக்கோளர் பற்றி அறிஞர் பெருமகன் திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் - கைக்கோளரை கொண்ட படைப் பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. கைப்பலம் பொருந்திய வீரர்களைக்கொண்ட படைப்பிரிவைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகும். வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர்" இத்தகைய கைக்கோளப்படையில் பாண்டியர் பெருவேந்தன் காலத்தில் வன்னியர்கள் இருந்துள்ளனர், கல்வெட்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலையிலும் கிடைத்துள்ளது - "காவல் பள்ளிகளில் வருத்திராண்டானான கைக்கொள பேரையன் பிடமார்" (A.R.E 2/1977) "திருநலகுன்றத்துப் பள்ளிகளில் செல்வன் வில்லியான கைக்கோளப்பேரரயனுக்கு" (IPS 500) Inscriptions credits to Santhosh Padayatchi & Murali Nayakar

புதுக்கோட்டை நெடுவாசல் சீமைக்கு தலைவர்களான வன்னியர் குலத்து மாவலி வாணராயன்

Image
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூர் வாணபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு மாவலிவாணராயர்களை "வன்னியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :- "நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர் மக்களில் பெற்றா . . . கள் காலிங்கராயரும்" (I.P.S. No.971) மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுக்கு பக்கபலமாய் அமைகிறது. அது :- "நெடுவாசல் சீமைக்குக் கறுத்தாவான பாண்டிபெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில் திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும் பமயவனப்பெருமாளான சிவலக் காலிங்கிராயரும் செந்தாமரைக்கண்ணரும் இம்மூவருமொம்" (I.P.S. No,942) எனவே, நெடுவாசல் சீமைக்கு தலைவர்களான (கர்த்தாவான) மாவலிவாணாதிராயர்கள் "வன்னியர்கள்" என்று உறுதியாகிறது. இந்த வன்னியர்கள் தான் பாண்டிய நாட்டில் அரசாட்சி புரிந்த மாவலிவாணாதிராயர்கள் என்று தெரியவருகிறது. குறிப்பு : இந்த கட்டுரை "வாணாதிராயர்கள்" என்ற தலைப்பில், வன்னிய சிற்றரசர்கள் என்ற புத்தகத்தில் 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது. Article By - Shri Murali Nayakar

புதுக்கோட்டை குடுமியான்மலை பேரரையர்களான பள்ளிகள்

Image
புதுக்கோட்டை மாவட்டம், திருமய்யம் வட்டம், சேரனூரில் இருக்கும் திருபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-   "திருநலக்குன்றத்துப் பள்ளிகளில் செல்வன் வில்லியான கைக்கொள பெரயனுக்கு தண்டெசுரவிலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது" ( Inscriptions of the Pudukottai State No. 500) மேலும் மூன்றாம் இராஜராஜன் காலத்து கல்வெட்டு ஒன்று இதே திருநலகுன்றத்து கல்வெட்டு ஒன்று மற்றொரு பள்ளி இனத்தை சேர்ந்தவரை பற்றி குறிப்பிடுகிறது :- "திருநலக்குன்றத்து பள்ளிகளில் பெரியான் சிறுமன்" மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகள் "திருநலக்குன்றத்துப் பள்ளிகளில்" என்று குறிப்பிடுகிறது. அதாவது "திருநலக்குன்றத்து வன்னியர்களில்" என்று குறிப்பிடுகிறது. திருநலக்குன்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் "குடுமியான்மலை" என்பதாகும். குடுமியான்மலை என்பது சங்ககாலம் முதல் இருந்துவரும் புகழ்ப்பெற்ற பகுதியாகும்.        எனவே, பாண்டியர் காலத்தில் குடுமியான்மலையில் பள்ளிகளான வன்னியர்கள் இருந்திருக்கின்றனர் என்று மிகத் தெளிவாக த...

சின்ன சேலம் காங்கேய உடையார்

Image
சின்ன சேலம் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் காங்கேய உடையார்கள், இவர்கள் வன்னியர் குலத்தை சேர்ந்தவர்கள். இன்றளவும் காங்கேய மன்னர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இவர்களை பற்றிய செய்திகள் 1500களிலே செப்பேடுகளில் கிடைக்கிறது. வன்னியர் பாளையக்காரர் வரிசையில் இவர்கள் பெயரும் வருகிறது - வன்னியர்(நடன காசிநாதன்) பக்கம் 236 கங்கர்கள் தங்களை காங்கேய வம்சம் என்று குறிப்பிடுவதால் இந்த காங்கேய உடையார்கள் கங்க வம்சமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு, இவர்களை பற்றிய சிவன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது, இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் - "அய்யன் காங்கையற்" என்று மன்னரை கல்வெட்டு குறிப்பிடுகிறது, சிவன் மற்றும் பெருமாள் கோவிலுக்கு தானம் செய்தது பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊர் ராயப்பநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மன்னர் காலத்தில் பயன்படுத்திய வாள், குறுவாள், ஈட்டி, மான்கொம்பு போன்ற போர்க்கருவிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர் - கல்லாநத்தம் என்ற ஊரில் இவர்கள் கோட்டை இருந்ததாகவும், அது தற்போது அழ...

வன்னியர்கள் வெட்சி கரந்தை போர் புரிந்ததை பற்றி குறிப்பிடும் மற்றொரு கல்வெட்டு!!!

Image
  வெட்சி கரந்தை என்பதே முதல் போர் முறையாகும் என்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.  "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்." -(தொல்:3:2:02) என்று தொல்காப்பியம் கூறுதலால் வேந்தனால் ஏவப்பட்ட படைவீரர் பகைவரான அயல் நாட்டு பகுதியினின்று நிரைகளை கவர்ந்து வந்து தம் நாட்டில் நிறுத்தி காத்தல் வெட்சி திணை என்பது விளங்கும். "ஆபெயர்த்துத் தருதலும் ............. மனைக்குரி மரபினது கரந்தை" -(தொல்:3:2:11,14) எனப்படுதலால்  பகைநாட்டு வெட்சிப்படையால் கவரப்பட்ட ஆநிரைக் கூட்டத்தை இந்நாட்டு படைஞர் மீட்பதே கரந்தை என்பதாகும். வெட்சி படைஞர் வெட்சிப்பூ மாலையையும், கரந்தை படைஞர் கரந்தைப் பூ மாலையையும் சூடுவர். இதற்கு முன் வன்னியர்கள் கரந்தை போரில் ஈடுபட்டதை பற்றி 2 கல்வெட்டுகள் உண்டு. ஆனால் வன்னியர்கள் வெட்சி போர் புரிந்ததை பற்றி குறிப்பிடும் முதல் கல்வெட்டு இதுவாகும். 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனின் 4ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். "ஜெயவனத்தானிப்பாலை உடையான் அண்ணான்டை என்கிற வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை அழகியார் சமுத்தி...

பிடவூர் வேளிர் கச்சிராஜர்

Image
முதலாம் குலோத்துங்கச் சோழனின் உடையாளூர் கல்வெட்டு ஒன்று மிகத் தெளிவாக "வெளீர்" (வேளிர்) என்று சொல்கிறது.  ஆனால் இந்த  கல்வெட்டை பதிப்பித்தவர்கள் "வேளிர்" என்ற வார்த்தையை பதியாமல் தவிர்த்துவிட்டனர்.  இது நிச்சயமாக தர்மமாகாது என்பதாகும்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் தேடும்பொழுது இந்த கல்வெட்டின் மைப்படியை  யாரோ பதிவேற்றியிருந்ததை காணநேர்ந்தது. இந்த கல்வெட்டை பார்த்தபொழு மிகுந்த அர்ச்சரியம் எனக்கு. ஏனென்றால் இந்த கல்வெட்டின் மைப்படியில் "வெளீர்" (வேளிர்) என்று மிகத் தெளிவாக இருக்கிறது.  இந்த கல்வெட்டை பதிப்பித்தவர் ஒன்றும் சாதாரண ஆய்வாளர் கிடையாது.  தத்தக்கா புத்தக்கா என்று கல்வெட்டு பார்க்கும் என்னாலேயே இதை படிக்கமுடிகிறது என்றால், இந்த கல்வெட்டை பதிப்பித்த அறிஞர் ஏன் இந்த "வேளிர்" என்ற வார்த்தையை தவிர்த்து படித்தார்கள் ?  அதற்கான காரணம் என்ன ?  ஏனென்றால் வன்னியர்களான கச்சிராஜர்களை கல்வெட்டு "வேளிர்" என்று சொல்வதால் இதை தவிர்த்து படித்தார்கள் என்பதாகும்.   இந்த கல்வெட்டு மிக முக்கியமானதாகும்.  இந்த கல்வெட்டு தான் "வேளிர்...

ஒளியர்களான அக்னி குலத்து வேளிர்கள்

Image
  தொல்லியல் அறிஞர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள், தான் எழுதிய புத்தகமான நடுகற்களில் வேளிர்களைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள் :-    " சங்கப் பாக்களில் வரும் வேளிர் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் போருடன் தொடர்பானவை, ஐம்பெரும் வேளிர் மற்றும் பதினொரு வேளிர் (அகம் 36, 135) போர்களில் ஈடுப்பட்டனர்.  மூவேந்தரும் ஒன்று கூடி, பாரி என்ற வேளிருடன் போரிட்டுள்ளனர்.  வேளிர் தம்மை அக்கினிக் குலம் என்று கூறிக் கொண்டனர். 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்று கபிலர் குறிப்பிடுகிறார்.  அரிக்கமேடு, கொடுமணல் பானை ஓடுகளில் வேள் என்ற சொற்கள் உள்ளன.  வேள் என்ற சொல் வேளு என்று படிக்கப்பட்டது.  வேள் என்ற சொல் வேள்வி என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பர், வேள் என்ற சொல்லுக்குத் தலைமை, விருப்பம், பிரகாசி என்ற பொருட்களே சிறப்பாகும்.  ஒளியர், வேளிர் எனலாம்.  வேணாடு என்றால் ஒளிநாடு என்று பொருளாகும். வேள், அரசர் ஒரே பொருளைத் தருவதால் பல நடுகற்களில் அரசர் என்ற சொல் இடம் பெறுகிறது ". வரலாற்று அறிஞர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் வாழ்ந...

பல்குன்றதைச் சேர்ந்த பள்ளி வேணாட்டரையன்(வேளிர்)

Image
  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சியமங்கலத்தில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1136) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :- . "பல்குன்றக் கொட்டத்துத் தென்நாற்றூர் நாட்டுச் சியமங்கலத்து ஆளுடையார் தந்மிஸ்வரமுடையார் கொயிலிலெ சம்பு புரத்திருக்கும் பள்ளி செல்வன் இவ்வூரிருக்கும் பள்ளி வெணாட்டரையனைக் கைப்பிழையாலெய்து செத்தமையில் நாட்டவரும் சம்புவராயரும் கூடி இவனிவ் வெணாட்டரையனுக்காகச் சாவவெண்டாம் கைப்பிழைபுகுந்தது இதுக்குத் தூணாண்டார் கொயிலிலெ அரைவிளக்கு வைக்கச் சொல்ல அரை விளக்குக்கு பசு பதினாறுருவும்" (S.I.I. Vol-VII, No.68). . சங்ககால வேளிர் குல நன்னன் அரசாட்சி செய்த பல்குன்றத்து கோட்டத்தில் அடங்கிய சியமங்கலத்தில் இருக்கும் தன்மிஸ்வரமுடையர் கோயிலில் நாட்டவரும் சம்புவராயரும் சபை நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர். . சபை எதற்காக கூடியது என்றால், சம்பு புரத்தினைச் சேர்ந்த பள்ளி செல்வன் என்ற வன்னியன்,  பள்ளி வேணாட்டரையன் என்ற வன்னியனை கைத்தவறி அம்புஎய்தி கொன்றுவிட்டான். . இந்த குற்றம் என்பது கைத்தவறி எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று என்ற காரணத்தினால், தண்டனை...

பரத்வாஜ குலம் சோம வம்சத்தில் தோன்றிய பல்லவ அரசன் சித்தராசன்

Image
  ஓய்சாளப் பேரரசர் வீர சோமேஸ்வரனின் (கி.பி.1253) செப்பேடு ஒன்று, அவரது மாமனார் சித்தராசனைப் பற்றி கூறுகிறது. பல்லவ அரசனான சித்தராசன் அவர்களை இச் செப்பேடு "புனித கடலான பரத்வாஜ குலம் சோம வம்சத்தில் (சந்திர வம்சத்தில்) தோன்றியவர்" என்று குறிப்பிடுகிறது. இவரது மகளின் பெயர் "சோமலா தேவி" என்பதாகும். இந்த ராணியம்மையார் சோமலா தேவி அவர்கள், ஓய்சாளப் பேரரசர் வீர சோமேஸ்வரனின் "பட்டத்தரசி" ஆவார்கள்.   இந்த செப்பேடு பல்லவர்களை மிக மிக தெளிவாக "பரத்வாஜ குலம்" என்றும் "சோம வம்சம்" (சந்திர வம்சம்) என்றும் குறிப்பிடுகிறது என்பதாகும். மூன்றாம் நந்திவர்ம பல்லவனை நந்திக் கலம்பகம் "சந்திர குலத்தவன்" என்று குறிப்பிடுகிறது. எனவே, பல்லவர்கள் "சந்திர வம்சத்தவர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் உறுதியாகின்றது என்பதாகும். Article By - Shri Murali Nayakar